720 total views
மதுரையில் மாபெரும் Video Gaming Event கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று (v.s chellam century hall)இல் நடைபெற்றது,அதில் சிறுவர்கள்,கல்லூரி மாணவர்கள் என பலரும் நூற்றுக்கணக்கான புதிய கேம்களை விளையாடி மகிழ்ந்தனர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை வீடியோ விளையாட்டுகள் பலரிடையே பிரபலமாக உள்ளன. ஆனால் அவற்றால் நன்மையா தீமையா என்று எப்போதும் ஒரு கேள்வி எழுகிறது. இதில் என்ன சந்தேகம்? தீமைதான் என்கிறீர்களா? இல்லை நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். பல கோடி மக்கள் தங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகள் வாயிலாக எப்போதும் பொழுதுபோக்க விரும்புவதால், வீடியோ கேம்களுக்கான சந்தை என்பது மிகவும் பெரியது. ஓர் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஓர் பொழுதுபோக்காக வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் தங்கள் அறிவாற்றல் திறன் மேம்படலாம் ,ஓர் சில புதிய விஷயங்களை நாம் கற்க வழிவகுக்கும்.மேலும் இது தடை செய்யும் அளவுக்கு ஓர் விஷயம் அல்ல அதை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித தீமையும் கிடையாது.
“நாம் கண்ணாம்பூச்சி,கிட்டி,பச்சை குதிரை தாண்டுதல், பம்பரம் விளையாடிய காலம் போய் இன்று வீடியோ கேம்களை விளையாடாதவர்கள் யாரேனும் உண்டா? “என்ற நிலை வந்து விட்டது.
Comments are closed.