பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு

579

 536 total views

இந்தியாவில் பிட்காயின், ரிப்பல், எதீரியம் மற்றும் பிற காயின்களின் மதிப்பு பல மடங்கு உயர்வை கண்டுள்ளது. மேலும் பிட்காயினை எந்த நாட்டில் இருந்தும் வாங்கி எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்பதால் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பினையும் பெற்றுள்ளது பிட்காயின் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்தும் வருகிறது.இந்நிலையில்,

பிரபல பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச் உலகின் மிக  பெரிய கிரிப்டோ -நாணைய பரிமாற்றங்களில் ஒன்று. தற்போது,  இந்த எக்ஸ்சேஞ்ச்யில் தற்போதைய விலைகளில் சுமார் 4கோடி டாலர் மதிப்புள்ள 7000 பிட்காயின் திருடபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஹேக்கர்கள் ஏராளமான பயனர் API விசைகளை, 2FA குறியீடுகள் மற்றும் சாத்தியமான பிற தகவலைப் பெற்றுள்ளனர் என்று பினன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பத்திரிகையில் வெளியிட்டார். ஃபிஷிங், வைரஸ்கள் மற்றும் பிற தாக்குதல்கள் உட்பட ஹேக்கர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் அறிவித்தனர்.

எனினும் இந்த மோசமான இழப்பு அதன் பயனர்களின் நிதி பாதிக்கப்படமாட்டாது  என்றும் அறிவித்துள்ளது.

You might also like

Comments are closed.