தானியங்கு காரை பற்றிய அச்சத்தை போக்குமா ரோபோ ரேஸ்?

577

 719 total views

இதுவரை ரேஸ்களை மனிதர்களின் மத்தியில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரத்தில் உலகின் முதல்முதலாக ஓட்டுநரில்லா ரேஸ்களை துவக்கி வைத்துள்ளனர். இதனால் ரோபோக்களிடையே ஒரு சுமுகமான போட்டியையும் மற்றும் பார்க்கும் ரசிகர்களுக்கிடையே ஒரு உற்சாகத்தையும் தரும். இந்த அறிவிப்பை E – எலக்ட்ரிக் ரேசிங் சீரிஸ் குழுவினர் அறிவித்துள்ளனர்.

             இந்த ரோபோ ரேசினை 2016 மற்றும் 2017 களில் மக்களின் முன் கொண்டுவர  எண்ணியுள்ளனர். தானியங்கு கார்களை பலர் எதிர்பார்த்துக்  கொண்டிருந்த இந்த சமயத்தில் இந்த நுட்பம் சாலையில் நடமாட தயாராகியுள்ளது என்பது நம்பமுடியாத ஒன்றே!  இதில் வாடிக்கையாளர்கள்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையை எதிர்கொள்வது  என்பது கார் தயாரிப்பாளர்களுக்கு கடினமான ஒன்றே! இதற்கு ரோபோ ரேஸ் ஒரு நம்பிக்கை தரும் அனுபவத்தை மக்களிடையே தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தானியங்கு காரை பற்றிய அச்சத்தை போக்குமா ரோபோ ரேஸ்?
பல மக்களின் தானியங்கு காரைப்  பற்றிய, அச்சத்தை போக்கும் விதமாக இந்த ரேஸ் அமைய உள்ளது. ஆகையால் பயனர்கள் அவர்களின் வேலையான வாகனம் ஓட்டுதலை மறந்துவிட்டு செயல்படும் நம்பிக்கை தன்மையை  இது கொடுக்கவல்லது. மேலும் ரோபோ ரேசில் மக்கள் பணத்தை முதலீடு செய்வதால் அவர்களுக்கு தானியங்கு காரின் மீதான ஒரு இனம் புரியா ஈர்ப்பு ஏற்படவும்  கூடவே அவர்கள் தானியங்கு காரின் தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கவும்  வாய்ப்புள்ளது.சோதனை ஓட்டம் செய்து   மக்களுக்கு உலகின் ஒரு புதிய சூழலைத் தரவுள்ள தானியங்கு கார்களைப்  பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தவும்,   மக்களின் கவனத்தையும் நம்பிக்கையையும் பெற இது நல்ல ஒரு மேடையாக அமையும்.
Current-E-Formula-E-Putrajaya-2015-Shiv-Gohil-Top-Shots-Team-Aguri-at-speed
இது கார் தயாரிப்பாளர்களிடையே ஒரு முன்னேற்றத்தினை கொண்டு வருவது மட்டுமல்ல மக்களிடையே தானியங்கு காரினைப் பற்றிய    விழிப்புணர்வையும்  கூடுதல் ஆர்வத்தையும் தூண்டும் ஒரு விளம்பரமாக அமையும்  என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் 2020 க்குள் சாலைகளில் உலவ விட தயாராகி கொண்டு  வரும்  ஓட்டுனரின் உதவி இல்லாமல் இயங்கக் கூடிய கார்கலை   கூடுதல் நம்பிக்கையுடன் வெளியிடலாம்.

You might also like

Comments are closed.