நகரும் மந்திர நாற்காலி :
531 total views
இந்த மந்திர நாற்காலியை ரியான் வியமர் என்பவர் தயாரித்துள்ளார் . இந்த மந்திர நாற்காலியை இவர் ஒரு நிருவனத்திற்காகவோ அல்லது பணத்தை ஈட்டுவதற்காகவோ உருவாக்கவில்லை . அவரது 9 மாதமே ஆன முதுகெலும்பு தசை நார் வலுவிழந்த மகனுக்காக வடிவமைத்துள்ளார்.
இந்த நாற்காலியை தன மகன்களுக்காக தயாரிக்க ஒரு வருடத்தை செலவளித்துள்ளார் என்பது வியக்கத்தக்கதே! இந்த நகரும் நாற்காலியை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு ராட்டினத்திலோ அல்லது விலங்கின் மேலோ ஏறி உல்லாச பயணம் செய்வது போலத் தோன்றும்.இதனால் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அனுபவம் இல்லாமல் செய்ய முடியும் என நம்புகிறார் இந்த பாசமிகு தந்தை . இந்த வீல்ச்சேர் மற்ற நாற்காலிகள் போலல்லாமல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது .வியமர் இயல்பாகவே குழந்தைகளுக்கான ஆடைகள் வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர்
திரு வியமர் முழுநேரமாக ஒரு செவிலித்தாய் போல் வேலை செய்து இந்த நாற்காலியை வடிவமைத்துள்ளார் .”எனது குழந்தைகள் எப்போதும் வானில் மின்னும் ஒரு நட்சத்திரமாக இருக்க வேண்டும் மேலும் யாருடைய சோகம் நிறைந்த கண்களோ பரிதாபமாகவோ மகனின் மேல் விழாமல் இருக்க இந்த அதிசய நாற்காலியை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.”
இந்த வருடம் இதே மாதிரி மேலும் 8 குழந்தைகள் இந்த நாற்காலியை பெற்றுள்ளனர் என்பது மகிழ்சிக்குரிய செய்தியே…..!
இந்த நாற்காலியை குழந்தைகளுக்கு பிடித்த உருவத்தில் வடிவமைப்பது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயமாகும்.இதனால் யாருக்கும் எந்தவித மனவருத்தமும் இல்லாமல் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட உணர்வில்லாமல் குழந்தைகள் மகிழ்ச்சியாக உணரும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இதனால் பிறவிலேயே உடல் ஊணமுற்றவர்கள் அனைவரும் இந்த இருக்கையில் இருக்கும்போது நோயால் பாதிக்கப்பட்ட உணர்வை பெறாமல் ஒரு இன்பச் சுற்றுலா சென்ற மகிழ்ச்சியான தருணத்தை உணர முடியும்.
இந்த பாசமிகு தந்தையின் கண்டுபிடிப்பு உண்மையில் பாரட்டத்தக்கதே! இதனால் பிறவிலேயே உடல் ஊணமுற்றவர்கள் அனைவரும் இந்த இருக்கையில் இருக்கும்போது நோயால் பாதிக்கப்பட்ட உணர்வை பெறாமல் ஒரு இன்பச் சுற்றுலா சென்ற மகிழ்ச்சியான தருணத்தை உணர முடியும். இந்த பாசமிகு தந்தையின் கண்டுபிடிப்பு உண்மையில் பாரட்டத்தக்கதே!
Comments are closed.