511 total views
டெக் மஹிந்திரா இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் ஐந்தாவது பெரிய நிறுவனம். இந்த நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 78,000 கோடி ரூபாய்க்கு மேல். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழும நிறுவனங்களில் இதுவும் ஒன்று.தற்போது அதன் நிகர லாபத்தில் 7.3 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
மார்ச் காலாண்டில் 1,132 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.
இது கடந்த ஆண்டு மார்ச் காலாண்டை விட 7.3% குறைந்துள்ளது. இந்த காலாண்டில் மொத்த வருவாய் 10.4% அதிகரித்து ரூ. 8,892 கோடியாக உள்ளது மற்றும் டாலர் அடிப்படையில் நிறுவனம் 169.3 மில்லியன் நிகர இலாபத்தை 13.7% குறைத்து 1,97.5 மில்லியன் வருவாயாக 1.9% அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 4,298 கோடியாகும்.இது கடந்த ஆண்டை விட 13.1% அதிகம்.டாலர் அடிப்படையில், வருவாய் $ 4.97 பில்லியனில் 4.2% உயர்ந்து – 5.8% வரை நிலையான நாணய அடிப்படையில். டிஜிட்டல் சேவைகளின் வருவாய் 41% உயர்ந்துள்ளது. பங்குதாரர்களுக்கு வாரியம் ஒரு டிவிடெண்ட்14 ரூபாய்க்கு வழங்கியுள்ளது.
அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ,தலைமைச் செயல் அதிகாரியுமான சி.பி.குர்நானி கூறியது:
குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றங்கள், பெருகிய டிஜிட்டல் போர்ட்போலியோ மற்றும் ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கணிசமான அதிகரிப்பு ஆகியவை அடங்கிய ஒரு திருப்திகரமான ஆண்டாக இருந்தது.மேலும் ரகுதன் மொபைல் நெட்வொர்க்ஸ் (Rakuten Mobile Network) என்கிற நிறுவனத்தோடு இணைந்து டெக் மஹிந்திரா ஐந்தாம் தலைமுறைக்கான அலைக்கற்றைகளில் பயன்படக் கூடிய next generation (4G & 5G) Software Defined Network laboratories தயார் செய்து வருகிறார்கள்.
மேலும் 1,21,082 பேர் பணியாளர்கள் உள்ளனர் இது கடந்த ஆண்டு காலாண்டை விட 8,275 பேர் கூடுதலாக வேலை பார்க்கிறார்களாம்.
Comments are closed.