அரசியல், சாதி மதம் பார்ப்பதில்லை தமிழனை அழிப்பவன்… அவனுக்கு என்றுமே நாம் தமிழன் தான்.
1,687 total views
அன்பு நண்பர்களே வணக்கம்.,
இடையராத பணிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் உங்களின் உறவினர் குடும்பம் இரண்டு இருக்கிறது., ஒரு நாள் உங்கள் உறவினர் இல்லாத அனைத்து மக்களும் வீடு புகுந்து உங்கள் உறவுக்கார பெண்களை கற்பழித்து, குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்றால்..
மற்ற ஊர்களில் இருக்கும் உங்களின் உறவினர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்?
இது போன்ற ஒரு சம்பவம் நம்மில் பலரின் வாழ்வில் ஏற்பட்டிருக்காது.. ஆனால் இது தான் தமிழ் தாய் தங்கைகளின் நிலை இன்று இலங்கையில்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருவர் போரில் பலி.
கர்நடக்கா, ஆந்திரா, கேரளா, இலங்கையில் இவன் நாடாரா, செட்டியாரா எனப் பார்த்து அடிக்கவில்லை… இவன் இந்துவா, கிறிஸ்தவனா எனப் பார்த்து அடிக்கவில்லை… பிறர் நம்மைப் பார்ப்பது “தமிழன்” என்றுதான்…
தமிழன் தான் இலங்கையின் மூத்த குடிமக்கள்… வெள்ளையானைப் போல் 1500 ஆண்டுகள் முன்னர் வந்து குடியேரியவன் தான் சிங்களா.
தமிழ் ஈழம் என்ற நாடு தான் உலக அகதிகளாக இருக்கும் நம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தாய் நாடு.
நேதாஜி செய்தது தீவிரவாதம் தான் ஆங்கிலேயனுக்கு.
சத்தியாகிரக போராட்டங்கள் தோல்வி அடைந்த பின்னர் தான் 1977இல் ஆயுதம் எடுத்து தமிழர்கள் போராட்டம் செய்தனர்.
போர் 2009இல் முடிந்த பின்னரும் தினம் தினம் தமிழன், தமிழச்சி எனும் ஒரே காரணத்திற்கான வடக்கு, கிழக்கு மாகானங்களில் இருக்கும் மக்கள் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.
நான் உங்களை போராட்டத்ிர்க்கு வீதிக்கு இப்போது அழைக்கவில்லை.. மக்களை கொன்று குவித்த ராஜ பக்ஸெ ஒரு அறிக்கை தயார் செய்து இது தான் தமிழர்களுக்கான நிவாரணம் என LLRC என ஒன்றைத் தருகிறான். அதை ஐ நா முன் மொழிகிறது.
எப்படி கொலைகாரணுடன் ஒரே வீட்டில் வாழ முடியும்..
இணையத்தில் இந்த மணுவில் உங்களின் பெயரைப் பதிவு செய்யுங்கள். குறைந்தது 10 நபர்களையாவது இந்த மணுவில் பெயரைப் பதிவிடச் செய்யுங்கள்…
அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும், போராட்ட முறைகளை விமர்சிப்பதும் நம் நோக்கமாக இருக்க வேண்டாம். அங்கே சொந்த நாட்டிலேயே அடித்து விரட்டப்பட்டு தினமும் சித்திரவதை அனுபவிக்கும் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்த உதவுங்கள்.
இங்கே சென்று உங்களின் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
Comments are closed.