நிகழ்ச்சிகள்
63,225,630 total views
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
2,593,784 total views
“முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” – (தொல்:பொரு:14)
இது தொல்காப்பியருக்கு முன்பே இடம்பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் ‘மனச்சான்றோடு மொழிப’ என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும் பொழுதையும் அதாவது வெளியையும் காலத்தையும் முதன்மைப்படுத்துகிறதே..
திணையியல் என்ற கருத்தாகக்கத்தை இலக்கிய வகைப்பாடு என்ற அளவிலேயே நமது மரபுசார்ந்த கல்வியியல் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு விரிந்த பார்வையுடன் கூடிய மெய்யியல் என்பதை காணத் தவறிவிட்டது.
“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப ” – (தொல்:பொரு:18)
இங்கு உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற இரண்டும் கருப்பொருளின் கீழ் பட்டியல் இடப்படுகிறது. தெய்வம் என்ற கருத்தாக்கம் கருத்தியல் நிலையின்பாற்பட்டது. அதை நேரடியாக காண இயலாது. ஆனால் உணவு நேராக தொட்டு உணரக் கூடிய நாள்தோறும் தேவைப்படுகின்ற ஒன்று. இதற்க்கு அடுத்ததாக மா எனப்படும் விலங்குகளும், மரம் எனப்படும் பயிரினங்களும், புள் எனப்படும் பறவையினங்களும் வகைப்படுத்தியுள்ளனர். தொழில்கள், இசை கருவிகள், போன்ற அனைத்து வாழ்நிலைக் கூறுகளையும் கருப்பொருள்களின் கீழ் தொல்காப்பியம் கொண்டு வருகிறது. நிலத்தின் அடிப்படையாக நிலக் கோளத்தைப் பிரிக்கும் அறிவியலாளர்கள், அதற்கென்றே இருக்கும் உயிரினங்களையும் பட்டியல் இடுகின்றனர். இந்த அண்மைக் காலப் பகுப்பு முறை தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே இருந்தது தமிழ் திணையமைவின் சிறப்பு என்றால் மிகையாகது.
உயிர், மெய், உயிர்மெய் என்ற வரிசைபாடு திணையவியல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. நிலங்களை மட்டும் தமிழர்கள் இயற்கையின் அடிப்படையில் வகுக்கவில்லை. தமது மொழிக் கூறுகளையும் அவ்வாறே அமைத்துள்ளனர். இன்னும் ஆழமாக தன் “திணையியல் கோட்பாடு” என்ற நூலில் விளக்குகிறார் திரு.பாமயன் அவர்கள்.
இன்னும் ஆழமாக நம் தினையியல் கோட்பாட்டை புரிந்து கொள்ள வாருங்கள் நம்ம வரலாறு நிகழ்வுக்கு…
நாள்: 16.11.2014, ஞாயிறு, மாலை 5:30 மணி
இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20.
தொடர்புக்கு: 9629127109
3,084,650 total views
1,983,890 total views
19 – 20, December 2014 அன்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மின்னனு நுட்பத்தில் புதிய சிந்தனைக்காண மாநாடு நடை பெருகிறது இதில் இந்த துறை சார்ந்த சர்வதேச நிபுணர்கள் பங்கு பெருகின்றனர். மேலும் இது விஞ்சானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொரியாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என செய்திகல் தெரிவிகின்றன.