3,417 total views
ஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற இந்த காலகட்டத்தில் 9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிட்டுள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போன்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போனாகும். இந்த விலைக்கு போன் வாங்குவதற்கு மாறாக ஒரு செல்போன் கடையையே சொந்தமாக்கி கொள்ளலாம் என நினைக்க தோன்றுகிறதா!! அப்படியென்ன மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத அம்சங்களை இது கொண்டிருக்கும் என நினைப்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக இதில் தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ துறையில் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முக்கிய அம்சங்கள்:
- 24 மெகாபிக்சல் கேமரா
- 5.5 ஐபிஎஸ் LED 2k தீர்மானம், லேசர் ஆட்டோ ஃபோகஸ்
- ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ராய்டு 5.1.1
- குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 செயலி
- பேட்டரி: 4000 mAh
- கை விரல் சென்சார்
- பாதுகாப்பு கேடயம் பாதுகாப்பு ஸ்விட்ச் செயல்படுத்தப்படுகிறது
- பாதுகாப்பான அழைப்புகள் மற்றும் என்கிரிப்சன் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள்
- நினைவகம்: ரேம் 4GB, சேமிப்பு 128 ஜிபி
Comments are closed.