2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:

594

 741 total views

     கடந்த சில வருடங்களாகவே வால்வோ கார்   அதன்   தானியங்கு  நுட்பத்தை    யாருக்கும் சேதம் விளைவிக்காமல் சாலையில் 2020க்குள் கொண்டு வரும் முயற்சியை  எடுத்து வந்தது.தற்போது  வால்வோ அதன்  தொழில்நுட்பத்தில் உண்மையில் ஒருபடி  முன்னேற்றிக்  கொண்டு    போய்   2017-க்குள் அதன் பாதி  தானியங்கு  s-90 ( semi autonomous car)  காரை  களமிறக்க தயாராக்கி வருகிறது.
2017_Volvo_S90_0007-889x518

2017 இல் அறிமுகபடுத்தவிருக்கும்  இந்த கார்  ஒரு முழுமையான தானியங்கு  காராக இல்லாவிடிலும் ஆனால் அதன் சிறிய திசைமாற்று உள்ளீடுகள் வழியாக  80 மைல் தொலைவுகள்  வரை கட்டுபடுத்திக் கொள்ளும் அளவிற்கு மேன்மை வாய்ந்தது.இதிலுள்ள பைலட் உதவுதல் தொழில்நுட்பத்தின் காரணமாக காரினை மிக கடினமான மற்றும்  ஆபத்தான சோதனைகளுக்கு உட்படுத்தி பார்க்கப்பட்டு  வருகிறது.   தூரத்தில் சாலையில் நடமாடும் விலங்குகளை பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கண்டறிய உதவுகிறது. வால்வோ S90  சில ஆண்டுகளில் சந்தைக்கு வரும் போது   கலப்பின பவர்டிரெய்ன் XC90 எஸ்யூவி மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
வால்வோ  அனேகமாக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டெட்ராய்டு  வாகன கண்காட்சியில்  S90  தானியங்கு கார் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக   வெளிபடுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. முழுமையான தானியங்கு காரினை சாலைகளில் காண்பதற்கு முன் வால்வோ  பாதி தானியங்கு கார்களை  முதலில் வெளியிடுவது அதன் வியாபார யுக்தியைக் காட்டுவதாகவே  உள்ளது. இதனால் மக்கள் ஒரு முழுமையான தானியங்கு வாகனம் சந்தைக்கு வரும்போது எந்தவித அச்சமுமின்றி  வாகனங்களை  பயன்படுத்துவர்.

You might also like

Comments are closed.