கால் டிராப் விவகாரத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை திருட முயற்சிக்கும் டெலிகாம் நிறுவனங்கள்:
514 total views
மொபைல் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப காரணங்களால் அழைப்பு தடைப்படுவது தான் கால் டிராப். சமீபத்தில் இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் இதனை குறைக்கும் பொருட்டு டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இது போல தடைபடும் ஒவ்வொறு அழைப்புக்கும் ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மேலும் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் என விதிக்கபடிருந்தது.இதை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டது. மேலும் இது போன்ற சலுகைகள் அமலுக்கு வந்தால் 1,000 முதல் 1,500 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும் . மேலும் இணைப்புத் தடைப்படாமல் 100 சதவீதம் சேவை வழங்குவது என்பது சாத்தியமில்லை என்று ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் போன்ற 21 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டெலிகாம் சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட டெலிகாம் டவர்களை நிறுவியதன் காரணமாக பங்குச்சந்தையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சங்கம் மற்றும் இந்திய செல்லுலார் நிறுவனங்கள் சங்கம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொள்ளாமலேயே இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைத்
Comments are closed.