ரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு
2,150 total views
பல்வேறு துறைகளில், ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பம் பரவி வருவதால், வாடிக்கையாளர் சேவைகள் பிரிவில், அதிகளவில் வேலையிழப்பு நேரிடும்’ என ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில்,தற்சமயம் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.
ரோபோடிக் ஆட்டோமேஷன் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்
ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் சாப்ட்வேர்; இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக பணிகளை மேற்கொள்ள உதவும் சாப்ட்வேர்; ஒரே மாதிரியான பணிகளை, தொய்வின்றி தொடர்ச்சியாக செய்யும், ‘போட்’ சாப்ட்வேர் போன்றவை அடங்கி உள்ளன.
இத்தகைய ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள், மனிதர்களை விட, வேகமாகவும், துல்லியமாகவும் பணிகளை செய்து முடிக்க உதவுகின்றன. அதனால், குறிப்பாக, வாடிக்கையாளர் சேவை நிறுவனங்கள், சாப்ட்வேர் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கணக்கு தணிக்கை அலுவலகங்கள் ஆகியவற்றில், ஆட்டோமேஷன் பணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவற்றில், வாடிக்கையாளர் சேவை பிரிவில் மட்டும், மிக அதிக அளவாக, ஆட்டோமேஷன் பணிகளின் பங்கு, 64 சதவீதமாக இருக்கும். இப்பிரிவில், ஒரே மாதிரியான பணிகள் திரும்ப திரும்ப செய்யப்படுவது தான், இதற்கு காரணம்.
வேலைவாய்ப்பு
பிரபல மென்பொருள் நிறுவனமான uipath 2021 ஆம் ஆண்டிற்குள் ரோபோடிட் புராசஸிங் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் 5 லட்சம் பணியாளர்களின் தேவை இருக்கும் எனவும் மேலும் இத்தகைய திறன் தேவைப்படும் பணிகளுக்கு, 2022 ஆம் ஆண்டில் 133 மில்லியன் பணியிடங்கள் உருவாக்க படும் என்று UiPath நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனர் டேனியல் டைன்ஸ் கூறுகிறார்.
மேலும் ,டெக்ஜிக் கோட் கிலாடியேட்டர்ஸ் 2019 ஹேக்கத்னுக்கான டெக்ஜிக் உடன் UiPath இணைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய குறியீட்டு போட்டியில் பங்குபெறுவதன் மூலம் உங்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் மற்றும் 1 கோடி வரையிலான ரொக்க பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது இந்த ஹேக்கத்தானில் பங்கேற்க https://www.techgig.com/codegladiators?sourcetype=cg19news இங்கே பதிவு செய்யுங்கள்.
Comments are closed.