மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு
1,174 total views
மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை online-ல் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது பயணர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடிச் செல்லவோ வேண்டாம். எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யலாம். இதற்கு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு (GPRS) செயல்பாட்டில் இருப்பது அவசியம்.
- டிக்கெட் முன்பதிவு செய்தல்
- PNR நிலைமை அறிதல்.
- பதிவு செய்த டிக்கெட்களை பார்க்கும் (Booked History) வசதி.
- பதிவு செய்த டிக்கட்டை நீக்க (Cancel Ticket) என பல வசதிகளை மொபைல் மூலமே செய்து விடலாம்.
கணினியில் E-Ticket முன்பதிவு செய்வதை போலவே உங்களின் Credit/Debit Cards உபயோகித்து மொபைலில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணமும் E-Ticket போலவே Slepper Class = Rs.10/- , குளிர் சாதன வசதிக்கு – Rs.20/- கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய வசதியின் மூலம் முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 1000 உறுப்பினர்கள் வீதம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரவேற்ப்பை பொருத்து இந்த எல்லை மாற்றி அமைக்கப்படலாம்.
Comments are closed.