ரிங்கோ பயன்பாட்டின் உதவியுடன் இனி இந்தியாவில் எங்கிருந்து பேசினாலும் ஒரு அழைப்பிற்கு 19 பைசா மட்டுமே!
1,096 total views
சில மாதங்களுக்கு முன்பு ரிங்கோ வெளியீட்ட தகவலின்படி உலகளாவிய சர்வதேச அழைப்புகளை மலிவான விலையில் பேசும் அம்சத்தை வெளியிட்டிருந்தது. தற்போது இன்றிலிருந்து தொடங்கி இந்தியாவில் எந்த மூளைக்கு பேசினாலும் ஒரு அழைப்பிற்கு 19 பைசா மட்டுமே என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தந்துள்ளனர். ரிங்கோவின் மூலம் பயனர்கள் ஒரு நிமிடத்திற்கு 19 பைசா வினை மட்டுமே கொண்டு இந்தியாவில் யாருடனும் வேண்டுமானாலும் பேசலாம் . மொபைல் சாதனம் அல்லது லேன் லைன் போன்ற எந்த சாதனத்தில் பேசினாலும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கபடுகிறது.
இந்நிறுவனம் நிமிடத்திற்கு 19 பைசா என்ற திட்டத்தை நிர்ணயித்துள்ளது ,சாதாரன அழைப்புகளை விட 90சதவிகிதம் குறைவாகவும் மேலும் இணையத்தில் வழக்கமாக உபயோகிக்கும் VOIP அழைப்புகளை விட 25சதவிகிதம் மலிவானதாகவும் உள்ளது.மேலும் புதிதாக ரிங்கோ பயன்பாட்டினை பயன்படுத்துபவர்களுக்கு 50நிமிட இலவச டாக் டைம்-களும் மற்றும் ரிங்கோவை நண்பர்களுக்கு அறிமுகபடுத்துபவர்களுக்கு கூடுதலாக 50நிமிட டாக் டைம்களும் வழங்கப்படுகிறது .
ரின்ங்கோ பயன்பாட்டினை , VOIP அழைப்புகளை இந்தியாவெங்கும் மலிவான விலையில் பேசி மகிழவே உருவாக்கப்பட்டுள்ளதாக ரிங்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி பாவின் துராக்கியா கூறினார்.இதனால் சர்வதேச அழைப்புகள் மற்றும் உள்நாட்டு அழைப்புகளை மலிவான விலையில் பெற அனைவரும் ரிங் பயன்பாட்டினை அணுகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது .
Comments are closed.