வரும் மார்ச் 15ம் தேதியுடன் Facebook முழுவதுமாக இயங்காது.

412

 950 total views

FaceBook தமது சேவையை வரும் மார்ச் 15ம் தேதியுடன் நிறுத்தப் போகிறது எனும் செய்தி பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு நிறுவனம் தான் FaceBook.  அமெரிக்காவில் Google.com ஐ விட அதிகமாக மக்கள் Facebookஐ தான் பயன் படுத்துகிறார்கள்.


Microsoft நிறுவனத்தின் Bing தேடு பொறியை மேம்படுத்தும் எண்ணத்தில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.

கோடிக்கணக்கான இணையதளங்களில் Facebook ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது.

இணையத்தில் புரளிகளை வெளியிட்டு பிரபலமான “INTERNET “FAUX” NEWS SITE WEEKLY WORLD NEWS” எனும் நிறுவனம் தான் இதையும் வெளியிட்டுள்ளது.

எவரேனும் உங்களிடம் இது போன்ற செய்தியைத் தெரிவித்து, உங்களின் மொபைல் எண் , ஈமேல் முகவரி அல்லது பாஸ்வோர்ட் சொல்லுங்கள் அல்லது, உங்களின் Facebook Passwordஐ இந்த ஈமேல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று சொன்னால் அதை நம்பி ஏமாற்றம் அடையவேண்டாம் என எச்சரிக்கிறோம்.

கோடி டாலர்கள் லாபத்தில் இயங்கும் நிறுவனம் மூடப்படும் எனும் வதந்தியை நம்ப வேண்டாம்.

You might also like

Comments are closed.