சமீபகாலமாக நடந்து வந்த போதை பொருள் வழக்கு ஒன்றில் வழக்கிற்கு சமந்தப்பட்ட தகவல்களைத் தர மறுத்ததை அடுத்து வாட்ஸ்அப் நிர்வாகத்தைக் கண்டித்து, பிரேசிலில் 72 மணி நேரத்துக்கு வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர். வாட்ஸ் நிறுவனத்தினர் இது குறித்த தகவல்கள் வெளியே உள்ள அந்நியர்கள் பார்வைக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை , மேலும் ஒருவர் அனுப்பும் குறுந்தகவல் மற்றொருவருக்கு மட்டுமே தெரியும் என்றும் அந்த தகவல்கள் எங்கள் சர்வரில் இருப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே திங்கட்கிழமை காலை முதல் வாட்ஸ் அப் சேவைக்கு 72 மணி நேர தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு நீதிபதி உயார்திரு.மார்சல் மான்டால்வோ.நீதிபதியின் இந்த தீர்ப்பு குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் “பிரேசிலில் இது சோக தினம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.