Uber -இன் உணவு வழங்கும் செயலி தற்போது அமெரிக்காவில் முன்னோட்டம்:

466

 702 total views

Uber என்பது  உலகாளவிய முறையில் போக்குவரத்து  ஓட்டுநர்  சேவையை வழங்குவதிலுள்ள முன்னணி நிறுவனமாகும். இதன் வழியே   Uber-இன் செயலியை மொபைலில் பதிவிறக்கி பயனர்கள்  தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை கூறினால்  Uber பயனர்களின் இடத்திற்கு ஓட்டுனர்களை அனுப்பி வைத்து அவர்களது பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவு அளிக்கிறது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் இது போன்ற சேவையை 58 நாடுகளில், 300 நகரங்களில்  கிடைக்குமாறு செய்யபட்டிருந்தது.  அது முதல் இதனை போன்றே பல நிருவனங்களும் Uber   ஓட்டுனர் சேவையை  தொடங்க ஆரம்பித்தனர்.   அடுத்த கட்டமாக  Uber  செயலியில்    ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு ஓட்டுனர் சேவையின் மூலமாக   உணவினை எடுத்து சென்று வழங்கும் திட்டத்தினை இதில் அறிமுகபடுத்தியுள்ளனர். இது தற்போது அமெரிக்காவில்   மிக முக்கிய பெருநகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூயார்க், ஆஸ்டின், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி, ஹூஸ்டன், சியாட்டில் மற்றும் டல்லாஸ் போன்ற நகரங்களில் அறிமுகபடுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட சில நகரங்களில் ஏற்கனவே  Uber  ஒட்டுனர் சேவை ஏற்கனவே பிரபலாமயிருந்த   காரணத்தினால்     இப்பகுதியிலிருப்பவர்களுக்கு  கண்டிப்பாக   இந்த சேவையை  அணுகுவது  புதிதாக இருக்காது.

Uber-இன்  இச்சேவை சந்தையில் வெற்றி பெற சாத்தியமில்லை என பல நிறுவனங்கள்  குறை கூறினாலும்  இதனை    வெற்றிகரமாக்கும் வழியினை நோக்கி Uber சென்று கொண்டிருக்கிறது.

 எப்படி சாத்தியமாகும்? 
மதிய உணவினை பெற விரும்பும்  பயனர்கள் Uber வழியாக அவர்களது ஆர்டரை காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆர்டர் செய்த பின்பு அதனை 30லிருந்து 40 நிமிடத்தில்  ஓட்டுனரின் வழியே விருப்பப்ட்ட  உணவினைப்  பெறலாம்.
                       உணவினை டெலிவரி செய்வது என்பது ஓட்டுனர்களுக்கு சவாலான ஓன்றாக  இருக்கும். ஒவ்வொரு  பகுதியிலிருந்தும் வருகிற  ஆர்டர்களைப்  பொறுத்து போய்ச் சேர வேண்டிய இடங்களை அறிந்து  பிரித்தறியும் தன்மை  சுவாரஸ்யமாக அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் Uber இதன் வழியாக   உணவினை எடுத்து வர ஆகும் நேரத்தினையும் பயனர்களுக்கு தெரிவிக்கிறது. ஆர்டர் ஒன்றுக்கு   $5யை  இந்நிறுவனம்  கட்டணமாக  விதித்துள்ளது. இந்த கட்டணம்  இடத்திற்கு இடம் வேறுபடும் எனவும்  தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆர்டருக்கான   கட்டணத்தையும்  அந்தந்த உணவகங்களிலேயே  வசூலித்து  விடுகிறது.  விரைவில் மதிய உணவு மட்டுமின்றி  இரவு உணவுகளும் சேர்க்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளது.

You might also like

Comments are closed.