இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook!

676

 1,493 total views

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார்.

பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது. இப்படங்களை 3 மாதங்களுக்குப் பின்னர் Facebookல் கண்ட முதல் மனைவி Policeல் தொடர்புகொண்டு முறைப்படி புகார் தெரிவித்திருந்தார். தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே அந்நபர் இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 Pound அபராதமும் விதிக்கப்பட்டது

You might also like

Comments are closed.